வாகனம் மோதி அரசு பஸ் டிரைவர் பலி

வாகனம் மோதி அரசு பஸ் டிரைவர் பலி

Update: 2023-02-02 18:45 GMT

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62), ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் காலையில் மீன் வாங்குவதற்காக ஊரம்பு சந்தைக்கு வந்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் செல்வராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்