அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருமருகலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-21 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சித்ரா தலைமை தாங்கினார். வட்டார இணை செயலாளர் சுகுமாறன், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், முன்னாள் வட்ட செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதிய தொகை அரசு உத்தரவுபடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சத்துணவு ஊழியர் சங்க திருமருகல் ஒன்றிய தலைவர் உஷாராணி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்