அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை

தர்மபுரியில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-01 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது 45). திருப்பத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அம்பிகா, தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் காச நோய் பிரிவில் பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணேசமூர்த்தி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்