கார் மோதி காவலாளி படுகாயம்

கிணத்துக்கடவு அருகே கார் மோதி காவலாளி படுகாயம் அடைந்தார்

Update: 2023-09-10 19:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் காளியண்ணன்புதூர் டி.ஜி. நகரை சேர்ந்தவர் சிவராஜ்(வயது 63). இவர் முள்ளுப்பாடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சிவராஜ் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். பொள்ளாச்சி-கோவை நான்கு வழிச்சாலையில் கோவில்பாளையம் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிவராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது சிவராஜ், கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்