பெரும்பாலை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை

பெரும்பாலை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2023-08-20 19:00 GMT

ஏரியூர்:

பெரும்பாலை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே உள்ள செம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது30). லாரி டிரைவர். இவருக்கும் ஒகேனக்கல்லை சேர்ந்த பிரபாகரன் மகள் தீபிகா (20) க்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. சதீஸ் லாரிக்கு சென்று விட்டார்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது தீபிகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டம், இதனால் குழந்தை அழுததும் தெரியவந்தது. இதை கண்டு அவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து பெரும்பாலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தீபிகாவின் தந்தை பிரபாகரன் பெரும்பாலை நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து தர்மபுரி உதவி கலெக்டர் சித்ராவும் விசாரணை நடத்தி வருகிறார். இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்