வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீ

வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீப்பிடித்தது.

Update: 2023-10-03 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை அருகே உள்ள மாவூர் பகுதியில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்றது. அப்போது சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பியில் வைக்கோல் உரசியதில் திடீரென தீப்பற்றியது. உடனே டிரைவர் மினி லாரியை தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நிறுத்திவிட்டு உடனடியாக இறங்கினார். பின்னர் வைக்கோலில் தீ மளமளவென பற்றியது. இதுகுறித்து அறிந்த திருவாடனை, தொண்டி தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் மினிலாரி முற்றிலும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறித்து திருவாடானை, தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்