இடி-மின்னலுடன் பலத்தமழை

மேல்மலையனூர் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்தமழை

Update: 2022-11-23 18:45 GMT

மேல்மலையனூர்

மேல்மலையனூரில் நேற்று பிற்பகல் 2 மணியிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 3 மணிக்கு லேசான சாரலுடன் மழை பெய்ய தொடங்கியது. 5 மணியிலிருந்து இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளம் தாழ்வான பகுதியில் தேங்கியது. இடி-மின்னல் காரணமாக மின்சாரம் தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமாவாசை விழாவுக்காக வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல் வளத்தி, வேட்டைக்காரன்பட்டி, முருகன்தாங்கல், சிறுதலைப்பூண்டி, கொடுக்கன்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்