அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது கூடலூர் போலீசில் இந்து முன்னணி புகார்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது கூடலூர் போலீசில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர்.

Update: 2023-09-08 21:30 GMT

கூடலூர்

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்தநிலையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது கூடலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதில் சனாதனம் குறித்து சர்ச்சையாக பேசியதால் இந்துக்களின் மனம் புண்பட்டு உள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்