இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-07 19:00 GMT

சுரண்டை:

சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் புதிய அரசு பள்ளியை உடனடியாக தொடங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக வீரகேரளம்புதூரில் இந்து முன்னணி சார்பில் சார்பில் பொதுமக்களை திரட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் மாரிமுத்து, ஊர் பெரியவர்கள் ராஜேந்திரன், வசந்தகுமார், மாவட்ட அன்னையர் முன்னணி செயலாளர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அச்சங்குன்றம் கிராமத்தில் அரசு பள்ளி அல்லது மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத் தலைவர் சாக்ரடீஸ், நெல்லை கோட்ட செயலாளர் ஆறுமுகசாமி உள்பட பலர் பேசினர்.

இதனைத் தொடர்ந்து வீரகேரளம்புதூர் தாசில்தார் அழகப்பராஜாவிடம் பள்ளி அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோரிக்கை மனுவை வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்