ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

Update: 2022-12-08 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் தண்டபாணிக்கு தகவல் கிடைத்தது. அவர் இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்