மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-29 17:30 GMT

நெமிலி

மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அருந்ததிபாளையத்தை சேர்ந்தவர் பரந்தாமன். அவரது மகன் டீக்கன் (வயது 21). இவருக்கும், சென்னையை ேசர்ந்த ஷர்மிளா (20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் டீக்கன், ஷா்மிளாவை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் வழக்குப்பதிவு செய்து, டீக்கனை கைது செய்தார்

Tags:    

மேலும் செய்திகள்