மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் வங்கிக்கடன் கேட்டு 174 பேர் மனு

தேனி மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் வங்கிக்கடன் கேட்டு 174 பேர் மனு கொடுத்தனர்

Update: 2022-08-05 16:43 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் மற்றும் வங்கிக்கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். முகாமில் 174 மாற்றுத்திறனாளிகள் வங்கிக்கடன் கேட்டு மனு கொடுத்தனர். 3 பயனாளிகளுக்கு இளைஞர் ஊரக திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் கணினி பயிற்சி பெறுவதற்கான உத்தரவு, 2 பயனாளிகளுக்கு தலா ரூ.2,780 மதிப்பில் காதொலி கருவிகள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். இதில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அசோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்