கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்காதல் ஜோடி தஞ்சம்

கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் ‌அடைந்தனா்.

Update: 2023-03-21 22:44 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள கண்ணங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ஹரிபிரசாத் (வயது 23). இவர் திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். அதே கம்பெனியில் இருகாலூரை சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகள் அஞ்சலி (23) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 வருடமாக காதலித்து வந்தார்கள்.

இவர்களுடைய காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கடந்த 19-ந் தேதி நம்பியூர் அருகே உள்ள திட்டமலை முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு நேற்று கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்தநிலையில் சமரச பேச்சுவார்த்தைக்காக போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்துள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்