கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-17 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய விவசாயிகள் சங்கத்தினர், தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உழவர் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவை போற்றும் வகையில் கோவில்பட்டி பயணியர் விடுதியில் நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் அல்லது தமிழக அரசு ஒதுக்கும் இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைத்து, அதில் தமிழகம் முழுவதும் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிர் தியாகம் செய்த விவசாய போராளிகள் புகைப்படத்தை நிறுவ கோரியும், அவருக்கு வெண்கல சிலை அமைக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இளையரசனேந்தல் பிற்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், நகர தலைவர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் உதவி கலெக்டர் ஜெயாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்