பழனிசெட்டிபட்டியில்மந்தையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-09-04 18:45 GMT

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் மந்தையம்மன், விநாயக பெருமான், கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் முடிந்து நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு வழிபாடு, யாகசாலை பூஜைகள் நடந்தன. இதையடுத்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்