பெரியகுளத்தில்பெண்ணை கத்தியால் குத்திய கணவர்

பெரியகுளத்தில் பெண்ணை கத்தியால் குத்திய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-06-29 18:45 GMT

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 35). கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முருகன் கத்தியை எடுத்து ராஜேஸ்வரியை குத்தினார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்