பைரவர் கோவில் திருப்பணிகளை அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு

பைரவர் கோவில் திருப்பணிகளை அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2022-08-03 15:58 GMT

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பிரசித்திப்பெற்ற பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு ஆய்வு செய்தார். அப்போது திருப்பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார். ஆய்வின்போது கோவில் செயல் அலுவலர் தினேஷ் சுந்தர் ராஜன், எழுத்தர் கார்த்திக், அர்ச்சகர் ஞானசேகர சிவாச்சாரியார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்