சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு - இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைப்புக்குழு ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

Update: 2022-05-29 12:38 GMT

சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஒருங்கிணைப்புக்குழு ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்து வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்ய உள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை துணை ஆணையர், நடராஜர் கோவில் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் 2014-ம் ஆண்டு முதல் கோவில் வரவு, செலவு கணக்குகள், தணிக்கை அறிக்கைகள், திருப்பணி குறித்த விவரங்கள், கோவில் சொத்துகள் மற்றும் குத்தகை விவரங்களை அறநிலையத்துறை ஆய்வின் போது வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்