பிரதமரின் கிசான் திட்டத்தில் தவணைத்தொகை பெற விவசாயிகள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்

பிரதமரின் கிசான் திட்டத்தில் தவணைத்தொகை பெற விவசாயிகள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-06-27 20:36 GMT

தவணை தொகை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பி.எம். கிசான் திட்ட பயனாளிகள் தவணை தொகை பெற்று வருகின்றனர். பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 3 தவணைகளில் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 13 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 14-வது தவணை பி.எம்.கிசான் திட்டப்பலனை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை (இ-கே.ஒய்.சி.) பி.எம்.கிசான் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 14-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப்படாது. எனவே விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி, உடனடியாக பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயன்பெறலாம்.

பதிவேற்றம் செய்து...

மேலும், விவசாயிகள் தாமாகவே பி.எம். கிசான் செயலி மூலம் முக அடையாளத்தை பயன்படுத்தி இ-கே.ஒய்.சி. முறையில் ஆதார் விபரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 73 பயனாளிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் பதிவேற்றம் செய்து தொடர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்