விஷம் குடித்து ஜீப் டிரைவர் தற்கொலை

போடியில் விஷம் குடித்து ஜீப் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-29 18:45 GMT

போடி சண்முக சுந்தரபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 50). ஜீப் டிரைவர். இவர், வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீ்ட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்