பெண் போலீசிடம் 7 பவுன் நகை பறிப்பு: நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை

நல்லம்பள்ளி அருகே நடைபயிற்சி சென்ற பெண் போலீசிடம் 7 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-30 19:30 GMT

நல்லம்பள்ளி அருகே எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சுமதி (வயது 34). இவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை எர்ரப்பட்டியில் இருந்து, நடைப்பயிற்சிக்காக நடந்து சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் கல்லூரி சந்திப்பு சாலையில், சுமதி நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுமதியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். இதனால் பதறிப்போன, பெண் காவலர் சுமதி போலீசில் புகார் கொடுத்தார்.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து சுமதி அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பெண் போலீசிடம் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்