தூத்துக்குடியில் கபடி போட்டிசனிக்கிழமை தொடங்குகிறது

தூத்துக்குடியில் கபடி போட்டி சனிக்கிழமை தொடங்குகிறது

Update: 2023-09-01 18:45 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கோவை ஈஷா யோகா மையம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டியை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்துகிறது. போட்டிகள் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7 மணிக்கு நடைபெறும் விழாவில் வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு பரிசுகளை வழங்குகிறார்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் தெரிவித்து உள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்