கண்டனி கண்மாயில் மீன்பிடி திருவிழா

கண்டனி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-07-09 18:03 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள கண்டனி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் வெள்ளை துண்டு வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, விரால், அயிரை உள்ளிட்ட பலவகை மீன்களை பிடித்தனர். பின்னர் பிடித்த மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்