கராத்தே போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை

கராத்தே போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-08-31 16:50 GMT

தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி திருப்பூரில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள கராத்தே மையத்தில் பயின்ற 29 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், அவர்கள் 12 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சியாளர் சதீஷ்குமாரையும் புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்