கோடநாடு வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது.

Update: 2022-07-12 06:55 GMT

சென்னை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி மற்றும் அவரது மகன் அசோக்பாபுவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆறுக்குட்டி, அவருடைய மகனிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்