விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் மகன் தற்கொலை

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் மகன் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-08-20 23:02 IST

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நத்தக்குழி காலனி தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளரான இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்‌‌. இளைய மகன் சுதின்(வயது 21) மற்றும் ஒரு மகன் சென்னை கோயம்பேட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணனிடம் கோபித்துக் கொண்டு சென்னையில் இருந்து செந்துறைக்கு வந்த சுதின், செந்துறை பஸ் நிலையத்தில் இறங்கி உள்ளார்.

அதன் பின்னர் அங்கிருந்து சென்ற அவர் அதிகாலையில் செந்துறை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை வைத்துபடுத்து இருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த ரெயில் தலை மீது ஏறி தலை துண்டானது. இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்