அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பங்கேற்பு

காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி புதிய நூலகம் திறக்கப்பட்டது.

Update: 2023-03-11 18:45 GMT

காளையார்கோவில்

காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி புதிய நூலகத்தை முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் உதயகுமார், சாரண ஆசிரியர் நாகராஜன், சாரண மாணவர்கள், பசுமை படை ஆசிரியர் ராம்குமார், கோவிந்தராஜ் மற்றும் பசுமை படை மாணவர்கள், நூலக பொறுப்பாசிரியர் கோமதி, இளையோர் நெஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்