தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை
தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் பகுதியை சேர்ந்த 42 வயது தொழிலாளி அவருடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வந்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ ேகார்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அவருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.