மதுரையில் மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுரையில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-09-10 20:32 GMT

பேரையூர்,

மதுரை மாவட்டம் சாப்டூர், சேடப்பட்டி, பேரையூர், போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது அணைக்கரைபட்டியை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 65), பெரியகட்டளையை சேர்ந்த செல்வமீனா (23), சின்னக்கட்டளையை சேர்ந்த முத்துக்கருப்பன் (55), சிலைமலைபட்டியை சேர்ந்த ராஜா (37), வண்டாரியை சேர்ந்த மாயன் (75) சந்தையூரை சேர்ந்த தவமணி (57), மாரிமுத்து (37), அல்லிகுண்டத்தை சேர்ந்த சிவகணேஷ் (22), கேத்துவார்பட்டியை சேர்ந்த கருப்பாயி (53) ஆகியோரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 85 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்