சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-01 18:09 GMT

அரக்கோணம்
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்த முத்து என்பவரை அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா கைது செய்து சிறையில் அடைத்தார்.

மேலும் இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரை செய்தார். அதன்பேரில், முத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்