மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-27 18:16 GMT

புன்னம் சத்திரம் பகுதியில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மது விற்று கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சித்திரை வடங்கம் பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்