நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று புதுக்குடியிருப்பு சுப்பையார் குளம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த குமார் (வயது 57) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.