ஆண்டிமடம்:
ஆண்டிமடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆண்டிமடம் அழகாபுரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் மது விற்ற சுதாகர் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.