லாரி டிரைவர் தற்கொலை
லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 52). லாரி டிரைவர். இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த கருப்பசாமி குமணன்தொழுவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று கருப்புசாமி உயிரிழந்தார். இது தொடர்பாக மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.