தூய்மை பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள்

ஆரணி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள்

Update: 2022-07-19 12:58 GMT

ஆரணி

ஆரணி நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தின் மூலம் என் குப்பை, என் பொறுப்பு, என் நகரம் எனக்கு பெருமை என்ற உறுதிமொழிக்கேற்ப நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தற்காப்பு உபகரணங்களான முகக்கவசங்கள், சோப்பு, கையுறை மற்றும் தளவாட உபகரண பொருட்களை 5-வது வார்டு நகரசபை உறுப்பினர் சுதாகுமார் வழங்கினார்

.அவற்றினை நகரசபை தலைவர் ஏ.சி.மணி, துணைத்தலைவர் பாரி பி.பாபு ஆகியோர் நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி முன்னிலையில் தூய்மை பணியாளர்களிடம் வழங்கினார்.

அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், சுகாதார உதவி அலுவலர் பிச்சாண்டி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்