மதுரை: ஊராட்சிமன்ற செயலாளர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை...!

மதுரை அருகே இடையபட்டி ஊராட்சிமன்ற செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-26 07:16 GMT


மதுரை மாவட்டம் இடையபட்டி ஊராட்சியின் (கிளெர்க்) செயலாளராக வரிச்சியூர் பகுதியை சேர்ந்த லஷ்மணன் பணியாற்றி வந்தார். இவர் கோவில் பூசாரியாகவும் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை லஷ்மணன் மோட்டார் சைக்கிளில் கோவில் பூஜைக்காக தச்சனேந்தல் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென அவரை வழிமறித்த சில மர்ம நபர்கள் தாங்கள் மறைத்துவைத்திருந்த ஆயுதங்களால் லஷ்மணனை சரமாறியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

அதில் பலத்த வெட்டு காயம் அடைந்த லஷ்மணனை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உயிரிழந்த லஷ்மணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்