போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது

போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-05-27 20:07 GMT

செம்பட்டு,மே.28-

திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோலாலம்பூர் புறப்பட தயாராக நின்றது. முன்னதாக அந்த விமான பயணிகளை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 52) என்பவர் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று கோலாலம்பூர் செல்ல இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை குடியேற்ற பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பின் போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்