மானாமதுரை நகராட்சி கூட்டம்

மானாமதுரை நகராட்சி கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-21 19:30 GMT

மானாமதுரை

மானாமதுரை நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. கமிஷனர் ரெங்கநாயகி, துணைத்தலைவர் பாலசுந்தரம், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- தலைவர் மாரியப்பன் கென்னடி:- மானாமதுரை புதிய பஸ் நிலையத்தில் தொடர்ந்து கடை நடத்தி வருபவர்கள் வாடகையுடன் 15 சதவீதம் உயர்த்தி வழங்கி தொடர்ந்து அவர்கள் கடை நடத்தலாம். கடை வேண்டாம் என கூறினால் அந்த கடைக்கு மட்டும் ஏலம் விடப்படும்.

கவுன்சிலர் இந்துமதி:- ராம் நகர் பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தலைவர்:- விரைவில் அனைத்து வார்டு பகுதிகளிலும் தெரு விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

தெய்வேந்திரன்:- தல்லாகுளம் மயானம் அருகே எவ்வித அனுமதியுமின்றி புதிதாக கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இது போன்ற ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆணையாளர் ரெங்கநாயகி:- விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கங்காதேவி:- நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும். துப்புரவு ஆய்வாளர் பாண்டிச்செல்வம்:- நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்