சூலக்கரையில் மாரத்தான் போட்டி

சூலக்கரையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2023-10-08 20:01 GMT


விருதுநகரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி சூலக்கரையில் உள்ள கூடுதல் இயக்குனர் அலுவலகத்திலிருந்து நடைபெற்றது. இதனை மாவட்ட விளயாட்டு அலுவலர் குமாரமணிமாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புபணி அலுவலர் மணிகண்டன், உதவி மாவட்ட அலுவலர் பால முருகன், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்