மருத்துவ பரிசோதனை முகாம்

நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது

Update: 2022-11-24 21:29 GMT

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி தலைமையில் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் நாங்குநேரி யூனியன் ஆணையாளர் கிஷோர்குமார், யூனியன் துணைத்தலைவர் இசக்கிபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்