மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; முதியவர் பலி

நெகமம் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

Update: 2023-09-01 23:00 GMT


நெகமம்


கிணத்துக்கடவு அருகே பெரியகளந்தையை சேர்ந்தவர் குட்டிய கவுண்டர் (வயது 83). இவர் நேற்று முன்தினம் வடசித்தூர்-காட்டம்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மன்றாம்பாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிரே வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குட்டிய கவுண்டருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்