வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

நாசரேத்தில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.

Update: 2023-05-26 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள வடலிவிளை மேலத்தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகன் குமரன் (வயது 22). இவர் கேரளாவில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக வந்திருந்தார்.

கடந்த 24-ந் தேதி இரவு வனத்திருப்பதிக்கும், இடையன்விளைக்கும் இடையே மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி சாலை ஓரம் நிறுத்தி வைத்திருந்த வேன் மீது மோதினார். இதில் காயமடைந்த குமரன் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்