மோட்டார் சைக்கிள் திருட்டு

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-06-02 14:49 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுபாண்டி மகன் கார்த்திக் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் அதிகாலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்