தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி சிந்தாமணி நகர் 1-வது தெருவை சேர்ந்தகாளிமுத்து மகன் கருப்பசாமி (வயது 42). சுமை ஆட்டோ ஓட்டுநர். இவரது மோட்டார்சைக்கிளை நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார். நேற்று காலையில் பார்த்தபோது அதை மர்மநபர் திருடி சென்று விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.