மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது

மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-22 21:03 GMT

லால்குடி:

லால்குடி அருகே மும்முடிச்சோழமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவத்தின் மகன் விஜய்(22). சம்பவத்தன்று காய்கறி வாங்க சென்ற இவர் சந்தப்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தனர். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து லால்குடி போலீசில் விஜய் புகார் அளித்தார். இந்நிலையில் லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி ஆகியோர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதனை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தனர். இதில் அவர், லால்குடி பரமசிவபுரம் அருகில் உள்ள அய்யன்வாய்க்கால் கரையில் வசிக்கும் ஜெயபாலின் மகன் ஸ்ரீராம்(27) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடியது அவர்தான் என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஸ்ரீராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்