நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நவராத்திரி திருவிழா

தேனி அருகே பூதிபுரத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நவராத்திரி திருவிழா நடந்தது.

Update: 2022-10-06 17:00 GMT

தேனி அருகே பூதிப்புரத்தில், வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம், ஆதிபட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி, வலையபட்டி ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஆதிபராசக்தி உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்தி திருவிழா கடந்த 26-ந்தேதி தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நவராத்திரியின் 10-வது நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஆதிபராசக்தி அம்மன் ஊர்வலம் நடந்தது. கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் புறப்பட்டது. ஆதிப்பட்டி, வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட 6 கிராமங்களுக்கும் இந்த ஊர்வலம் சென்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஊர்வலத்தை தொடர்ந்து கோவில் வளாகத்தில் மகிஷாசுரனை ஆதிபராசக்தி வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்