ஆண்டிப்பட்டி அருகே மாணவர் தீக்குளித்து தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-08-05 16:13 GMT

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் மணிராஜ் (வயது 22). இவர் பிளஸ்-2 முடித்து மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். அதற்காக முயற்சி செய்தும் வந்தார். ஆனால் வறுமையின் காரணமாக அவரால் மருத்துவ படிப்பு படிக்க முடியவில்லை என்று தெரிகிறது.

இதனால் மணிராஜை அவருடைய தந்ைத, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்த்தார். ஆனால் மணிராஜ் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் மருத்துவம் படிக்க முடியாததால் மனமுடைந்த அவர் கடந்த மாதம் 25-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் முழுவதும் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்