எட்டயபுரம் அருகே லாரி மோதி வாலிபர் பலி

எட்டயபுரம் அருகே லாரி மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-09-12 18:45 GMT

எட்டயபுரம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள விட்டிலாபுரம் வள்ளூவர் நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் அழகுராஜன்(வயது22). இவரும், நண்பர்களும் நேற்று முன்தினம் பரமக்குடியில் நடந்த இமானுவேல்சேகரனர் நினைவுதினத்தில் பங்கேற்க காரில் சென்றனர். பின்னர் அங்கிருந்து நள்ளிரவில் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

எட்டயபுரம் அருகே மின்வாரிய அலுவலகம் அருகே நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக காரை அவர்கள் நிறுத்தி உள்ளனர். பின்னர் அனைவரும் காரில் இருந்து இறங்கியுள்ளனர். உடன் வந்தவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக ெசன்ற நிலையில், அழகுராஜன் கார் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து திருச்செந்தூர் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அழகு ராஜன் மீது மோதியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்