வீரபாண்டி அருகேவிஷம் குடித்து பள்ளி மாணவர் தற்கொலை

வீரபாண்டி அருகே விஷம் குடித்து பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-14 18:45 GMT

வீரபாண்டி அருகே உள்ள தர்மபுரி ரேஷன் கடை தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் காளீஸ்வரன் (வயது 16). இவர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 9-ம் வகுப்பு படித்து முடித்ததால் அவரது தந்தை பரமசிவம் 10-ம் வகுப்பு புத்தகத்தை வாங்கி கொடுத்து காளீஸ்வரனை படிக்கும்படி கூறினார். ஆனால் காளீஸ்வரன் படிக்காமல் விளையாடி கொண்டிருந்தார்.

இதனை அவரது தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காளீஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்