புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

கந்திலி வட்டார வளமையம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update:2023-01-27 23:22 IST

கந்திலி ஒன்றியம் வட்டார வள மையம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்கம், புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் கெஜல்நாயக்கன்பட்டி பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

ஊர்வலத்தை ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சரவணன், தொடங்கி வைத்து பேசினார் எழுத்தறிவு திட்டம் குறித்து பதாகைகளை மாணவ-மாணவிகள் ஏந்திக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். ஊர்வலத்தில் வட்டார வள மையகல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்